Thaai Thindra Manne lyrics

2010-03-14

தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

நெல் ஆடிய நிலம் எங்கே?
சொல் ஆடிய அவை எங்கே?
வில் ஆடிய களம் எங்கே?
கல் ஆடிய சிலை எங்கே?
தாய் தின்ற மண்ணே?

கயல் விளையாடும் வயல் வெளி தேடி காய்ந்து கழிந்தன கண்கள்
காவிரி மலரின் கடிமணம் தேடி கருகி முடிந்தது நாசி
சிலை வழி மேவும் உளி ஒலி தேடி திருகி விழுந்தன செவிகள்
ஊன்பொதி சோற்றின் தேன்சுவை கருதி ஒட்டி உலர்ந்தது நாவும்
புலி கோடி பொறித்த சோழ மாந்தர்கள் எலி கரி கொரிப்பதுவோ
காற்றை குடிக்கும் தாவரமாகி காலம் கழிப்பதுவோ
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ, மன்னன் ஆளுவதோ

நொறுங்கும் உடல்கள், பிதுங்கும் உயிர்கள், அழுகும் நாடு, அழுகின்ற அரசன்

பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோ தூதோ முன்வினை தீதோ
களங்களும் அதிர களிறுகள் பிளிற சோழம் அழைத்து போவாயோ
தங்கமே எம்மை தாய் மண்ணில் சேர்த்தால் புரவிகள் போலே புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை அருவிகள் போலே அழுதிடுவோம்
அது வரை அது வரை…
தமிழர் காணும் துயரம் கண்டு தலையை சுற்றும் கோளே அழாதே
என்றோ ஒரு நாள் விடியும் என்றே இரவை சுமக்கும் நாளே அழாதே
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி உரையில் தூகும் வாளே அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ என்னோடழுகும் யாழே அழாதே